*கபில் ரிட்டன்ஸ்"திரைப்பட விமர்சனம்..

’கபில் ரிட்டன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பேராசிரியர் ஸ்ரீனி செளந்தரராஜன் இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கபில் ரிட்டன்ஸ்’. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி,  திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் எப்படி இருக்கிறது?,  பார்ப்போம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீனி செளந்தரராஜனுக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றாலே பிடிக்காது. தன்  வீடுஅருகே யார் கிரிக்கெட் விளையாடினாலும் அவர்களை விரட்டியடிப்பார். அப்படி இருக்க   நாயகன் மகன்  கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால், அதற்கு நாயகன் மறுப்பு தெரிவிக்கிறார் , கிரிக்கெட் விளையாட்டை தவிர மற்ற விளையாட்டடை ஆடுமாறு
 கூறுகிறார் .கிரிக்கெட் விளையாட்டை நாயகன்  வெறுப்பதற்கு காரணம் என்ன? என்பதை கண்டறிகிறார்  அவரது மனைவி, அந்த பிரச்சனையை கண்டறிய அதன் பிறகே அவர் தனது மகனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறார்.

இதற்கிடையே. தேசிய கிரிக்கெட் அகடாமி சார்பில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. அந்த தேர்வில் கலந்துக்கொள்ளும் நாயகன் மகன் தவறாக பந்து வீசியதாக நிராகரிக்கப்படுகிறார். ஆனால், ஆடுகளத்தில் இருக்கும் குறைகளையும் தவறாக பந்து வீசும் வீரர்களை. நாயகன் தேர்வுக் குழுவினரிடம் உண்மையை சொல்லி விளக்குகிறார் தனது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்கிறார். ஆனால், அவருடைய வாதத்தை தவறாக புரிந்துக்கொள்ளும் தேர்வுக் குழுவின் இருப்பவர் ரியாஸ் கான், அவரது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க நாயகனுக்கு  ஒரு போட்டி வைக்கிறார். கிரிக்கெட்டையே அடியோடு வெறுப்பவர் எப்படி இந்த சவாலை எதிர்கொள்ள போகிறார், என்று நாயகன் மகன் உள்ளிட்ட ஒட்டு மொத்த கூட்டமே அதிர்ந்து போக, அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆச்சிரியத்தில் உரையும் அளவுக்கு நாயகன் அந்த சவாலில் வெற்றி பெறுகிறார். அவருடைய இந்த அபாராமான திறமையை அதிசியத்தை பார்த்து வியக்கும் தேர்வுக்குழு எடுக்கும் முடிவால், இதுவரை கிரிக்கெட் உலகில் நடக்காது ஒரு அதிசயம் நடக்கிறது. அது என்ன?, கிரிக்கெட்டை  நாயகன் வெறுத்த காரணம் என்ன ?, கிரிக்கெட்டை வெறுத்தவர்  உலக சாதனை நிகழ்த்தும் அளவுக்கு பந்து செயல்பட்டது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘கபில் ரிட்டன்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீனி செளந்தரராஜன், முதல் படம் போல் அல்லாமல் தயக்கம் இன்றி எதார்தமான நடிப்பு  விளையாட்டு வீரர்ராக நம் மனத்தில் நிற்கிறார்
 பல படங்கள் நடித்த அனுபவம் பெற்ற நடிகர்கள் போல் இருந்தது 
 சிறு வயதில் நடந்த சம்பவத்தை எண்ணி கலக்கம் அடைவது, ஆட்டோ ஓட்டுநரிடம் நட்பு பாராட்டுவது, மகனுக்கு ஒரு பிரச்சனை என்றதுமே புயலாக  அவதாரம் எடுப்பது, மற்றவர்கள் கேலி கிண்டல் செய்தாலும், அதை பெரிதுபடுத்தாமல்  சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து போவது, என்று அனைத்து இடங்களிலும் உணர்வுப்பூர்வமாக நடிப்பு ரசிக்கும்படியாகவும் இருந்தது . படம் முழுவதும் பல நல்ல விசயங்களை சொல்லி பார்வையாளர்களை கவனிக்க  வைத்தும் மகிழ்வித்தும் அவர்களுக்கு ஊக்கமும், தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 நாயகனுக்கு மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தனது கணவன் தடுமாறும் இடங்களில் அவரது பிரச்சனையை அறிந்து, அதில் இருந்து அவரை மீட்டெடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டும்படி இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் இருக்கிறது.

சிறு வயது நாயகனாக வேடத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பரத் மற்றும் நாயகன்மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஜான் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தாத்தா, அப்பா மற்றும் அம்மா என்று ஆளுக்கு ஒரு ஆசையை தன் மீது திணித்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விளையாட்டாக பயணிக்கும் ஜான் இயல்பாக நடித்திருக்கிறார்.

மாஸ்டர் பரத், பார்ப்பதற்கு நடிகர் விஜய் சாயலில் இருப்பதோடு, நடிப்பை மிக சாதாரணமாக  கையாள்கிறார். பாடல்களில் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷன் என அனைத்துமே கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. எந்தவித அனுபவமும் இன்றி முதல் படத்திலேயே அசத்தியிருப்பவர், நிச்சியம் சினிமாவில் நல்ல எதிர் காலம் உள்ளது 
கிரிக்கெட் தேர்வுக் குழுவின் உறுப்பினர் வேடத்தில் நடித்திருக்கும் ரியாஸ் கான், ஆரம்பத்தில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானாலும், அதன் பிறகு நாயகனுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பால் சிறந்த குருவாக முத்திரை பதிக்கிறார்.

பருத்தி வீரன் சரவணன், பேபி ஷர்ஷா ஆகியோரும் தங்களது பணியை குறையில்லாமல் செய்து ரசிகர்கள் மனதில் நிறைந்துவிடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷியாம் ராஜ், கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார். கிரிக்கெட் தொடர்பான காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர் எளிமையான லொக்கேஷன்களை கூட ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையில், சினேகன், பா.விஜய், அருண்பாரதி ஆகியோரின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருப்பதோடு, ரசிக்கும்படியாக புரியும்படியாகவும். இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

வாழ்க்கையில் சாதிக்க வயது தடை இல்லை என்ற கருத்தை வலியுறுத்தும் கதையில், கிரிக்கெட் விளையாட்டையும், அப்பா - மகன் செண்டிமெட்டையும் சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கும் நாயகனாகவும் இயக்குனராகவும் ஸ்ரீனி செளந்தரராஜன், அதில் ஒரு சஸ்பென்ஸையும் அவைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். வழக்கமான விளையாட்டு திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை அமைத்ததோடு, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் படமாக இருந்தது வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.

தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன் என்று முதல் படத்திலேயே பல பணிகளை சிறப்பாக செய்து அனைவரின் கவனத்தை  ஈர்க்கும் ஸ்ரீனி செளந்தரராஜன், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். தந்தை - மகன் இடையிலான பாசத்தை வெளிப்படுத்துவது மற்றும் மகனை விளையாட்டு வீரராக வெற்றி பெற செய்ய போராடும் தந்தை போன்ற கதையம்சம் கொண்ட பல படங்கள் வந்திருந்தாலும், இந்த கதையை மிக வித்தியாசமாக கையாண்டிருக்கும் விதம் அற்புதம் , எதிர்பார்க்காத திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் இயக்குநராக முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்.

திரைப்படம் என்பது பொழுது போக்கிற்கானது.  நல்ல கதையை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஏற்க்கும்படியாக ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்
 இயக்குநர் ஸ்ரீனி செளந்தரராஜனின் இந்த ‘கபில் ரிட்டன்ஸ்’ வெற்றி. மக்கள் ஆடியன்ஸ் ரிட்டன்ஸ் கொடுப்பார்கள்

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்