கபில் ரிட்டன்ஸ்

கபில் ரிட்டன்ஸ்
------------------------------
மகன் இன்ஜினியராக வேண்டும் என்று தந்தையும் டாக்டராக வேண்டும் என்று தாயும் கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள். ஆனால் மகன்  மொபைல் போன், வீடியோ கேம் போன்ற இதர விளையாட்டுக்களில் மூழ்கி விடுகிறான். திடீரென கிரிக்கெட் 
விளையாடும் வாய்ப்பு மகனுக்கு வருகிறது. தந்தை வேண்டாம் என்று மறுக்கிறார். இருப்பினும் தான் ஒரு கொலை குற்றவாளி என அடிக்கடி நினைத்து மனம்   புழுங்கி மன உலச்சலுக்கு ஆளாகிறார். இதை அறியும் மனைவி ஏன் என ஆராய்வது தான் கதையின் திருப்பு முனையாக அமைகிறது. இவ்வாறான ஒரு சுவாரசியமான கதைகளத்துடன் சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்லப்படும் படக்கதை தான் கபில் ரிட்டன்ஸ் என்கிறார் இயக்குனர் டாக்டர்.ஸ்ரீனி சௌந்தரராஜன்.

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன்  கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார். கதையின் நாயகியாக நிமிஷா, பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான் ,வையாபுரி மாஸ்டர் பரத்,     சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு- 
ஷியாம் ராஜ்

 இசை -
ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்

பாடல்கள்-  
பா.விஜய், சினேகன், 
அருண் பாரதி 

எடிட்டிங்-வில்சி 

நடனம்-சங்கர் 

சண்டை பயிற்சி- குன்றத்தூர் பாபு 

நிர்வாக தயாரிப்பு-
 ஏ.ஆர்.சூரியன்

தயாரிப்பு -
தனலட்சுமி கிரியேஷன்ஸ்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
 டாக்டர். ஸ்ரீனி செளந்தரராஜன்

இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பா.விஜய் எழுதிய "தன்னைப்போலே ஒரு அன்பன், கண் இமைப்போலே தான் காத்திடும் நண்பன்", என்ற பாடல்  தந்தை  மகன் பாசத்தின் அடிப்படையில் அமைந்த பாடலாக உருவாகியுள்ளது.

சினேகன் எழுதிய "வானம் இனி தூரம் இல்லை வாழ்க்கை இனி பாரமில்லை", என்ற பாடல், கனவு நிறைவேறுவதற்கு வயது தடை இல்லை என்று நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

அருண்பாரதி எழுதிய என்னங்க என்னங்க எஜிக்கேஷன் எல்லாமே இங்க கன்ஃபியூஷன்...என்ற துள்ளல் இசை பாடல் அனைவரையும் ஆட்டம் போடவைக்கும்.

இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருப்பதால், அதுவும் பவுலராக கதாநாயகன் வருவதால் கிரிக்கெட்டின் மூத்த பௌலர்களிடம் ஆலோசனை கேட்டு படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது

இதன் படப்பிடிப்பு சென்னை,திருச்சி, மலைக்கோட்டை, உறையூர், மதுரை,  திருமங்கலம், திடியன் மலை போன்ற இடங்களில் நடைபெற்றது.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.   

- வெங்கட் பி.ஆர்.ஓ

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்