வில் வித்தை திரை விமர்சனம்
"வில்வித்தை படத்தை பற்றி பார்ப்போம்.கதாநாயகனான கால் டாக்ஸி டிரைவர் தன் வாழ்நாளில் தன் வீட்டு அருகில் நடந்த சம்பவத்தினை கூறுவது. பள்ளி மாணவி பாவனா என்னும் சிறுமி பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள்.இதை கண்டு கொதித்து எழுந்து அதிகாரிகளிடம் முறையிடுகிறான். நீதி கேட்டு எல்லா இடங்களிலும் போராடுகிறான். அதிகாரிகளிடம் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை. அந்த சிறுமியும் தற்கொலை செய்துகொள்கிறாள். பெற்றோர்களும் இறந்து விடுகின்றனர். அந்த அந்த சம்பவத்தின் பாதிப்பினால் நாயகனுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தனக்குள் இருக்கிற இன்னொரு மனிதனாக உருவாகி பாலியல் துன்புறுத்தலை ஏற்படுத்திய அனைவரையும் பழி வாங்கி விடுகிறான் நாயகன் கால் டாக்ஸி டிரைவர். பாலியல் துன்புறுத்துபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் இன்றைய காலகட்டத்தில் தேவையான படம் செ.ஹரி உத்ரா. முயற்ச்சிக்கு பாராட்டு:ஒளிப்பதிவு: RN சிவக்குமார், படகாட்சி பதிவு சிறப்பு இசை...இசை AJ அலிமிர்ஸ்க்: பரவாயில்லை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம் மற்றும் இதில் பணியாற்றி அனைத்துதொழில் நுட்ப கலைஞர் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்:
வானிலே பால் நிலா புவிதழ் பூக்கிறதே... என்ற பாடலை வித்யாசாகர் எழுதியிருக்கிறார். கார்த்திக் ராமசாமி பத்மலதா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
படத்தின் கதையை சொல்ல வந்ததை சரிவர சொல்ல விலை எனவே இப்படம் சமூதாய அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கும் படம்