Skip to main content

*குற்றம் புரிந்தால்*, திரைப்படத்தின் விமர்சனம்:




அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆத்தூர் ஆறுமுகம், சுகந்தி ஆறுமுகம் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டிஸ்னி.
இதில் ஆதிக்பாபு, அர்ச்சனா, எம்.எஸ்.பாஸ்கர், நாடோடிகள் அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கே.கோகுல், இசை-கே.எஸ்.மனோஜ், எடிட்டிங்-எஸ்.பி.அஹமத், சண்டை-மிரட்டல் செல்வா, கலை-வினோத்குமார், பாடல்கள்-கபிலன், கார்த்திக் நேதா, நடனம் இருஷன், பிஆர்ஒ-கோவிந்தராஜ்.

மாமா எம்.எஸ்.பாஸ்கர் ஆதரவில் வளரும் ஆதிக்பாபு ஹீரோ , மாமா வின் ஒரே  மகள் கதாநாயகி அர்ச்சனா இருவருக்கும் காதலிப்பதை அறிந்து திருமணம் செய்து வைக்க எம்.எஸ்.பாஸ்கர் முடிவு செய்கிறார். வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்போது மூன்று பேர் வீட்டுக்குள் புகுந்து ஆதிக் பாபுவையும் எம்.எஸ்.பாஸ்கரையும் ஆயுதங்களால் அடித்து போட்டு விட்டு அர்ச்சனாவை பாலியல் வன்கொடுமை செய்ய, இதில் அர்ச்சனா இறந்து விடுகிறார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு    வருகிறார் ஆதிக் பாபு பழையநினைவுகள் வந்து போகின்றன போலீஸ் புகார் கொடுத்தும் கெnலைகார கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  உன்மை குற்றவாளி தெரிந்தும் போலீஸ் கைது செய்யவில்லை போலியான குற்றவாளி தயார் செய்து ஹீரோவிடம் காண்பிக்க இவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை சொல்லிவிட்டு ஹீரோ போலீஸ் ஸ்டேஷனைவிட்டு வெளியேறுகிறார்  

போலீஸ் அதிகாரியும், அரசு மருத்துவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை அறிந்து துடித்து போகிறார். உண்மையான கொலையாளிகளை பிடித்து தண்டனை கொடுக்க முடியாமல் தவிக்கும் ஆதிக் பாபு, சட்டத்தை தன் கையில் எடுக்க முடிவு செய்து போலீஸ் அதிகாரியையும், அரசு மருத்துவரையும் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் செல்கிறார். இந்த கொலைகளை செய்தவனை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நாடோடிகள் அபிநயா களமிறங்குகிறார். தேடுதல் வேட்டையில் ஆதிக் பாபு, போலீசில் மாட்டினாரா? மற்ற மூன்று பேரை கொலை செய்ய செல்லும் ஆதிக் பாபு அவர்களை பழி தீர்த்தாரா? இல்லையா இறுதியில் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

புதுமுக நாயகனாக ஆதிக் பாசமான மாமா, நேசிக்கும் காதலி என்று சந்தோஷ வாழ்க்கை ஒரு நொடியில் சுக்குநூறாக உடையும் தருணமும், அதிலிருந்து மீள முடியாமல்  மனஉளைச்சலில் தவிப்பதும், கொலையாளிகளை கண்டுபிடித்து பழி வாங்குவது, போலீசிடமே தடையமும், சவாலும் விட்டு செல்வது என்று அனைத்து காட்சிகளிலும் இயல்பாகவும், உணர்வுபூர்வமாகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

காதலியாக அர்ச்சனா, மாமாவாக எம்.எஸ்.பாஸ்கர், இன்ஸ்பெக்டராக நாடோடிகள் அபிநயா ஆகியோர் நடிப்பு கச்சிதம். இவர்களுடன் அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் போன்றோர் அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து நிறைவாக செய்துள்ளனர்.நாயகன் நடிப்பு பயிற்ச்சி கொஞ்சம் தேவை  திரை உலகில்  நல்ல எதிர்காலம் உள்ளது .

ஒளிப்பதிவு-கே.கோகுல், இசை-கே.எஸ்.மனோஜ், எடிட்டிங்-எஸ்.பி.அஹமத், சண்டை-மிரட்டல் செல்வா மிரட்டி உள்ளாளர் :.கலை-வினோத்குமார் மற்றும் அனைத்து தொழில்  நுட்ப கலைஞகளின் பங்களிப்பு சிறப்பாக அமைந்தது:

கதை ஒட்டம் க்ரைம் ,த்ரிலிலிங் அடுத்தகட்ட காட்சிகள் கதைநகர்தல் எதிர்பார்க்காத கொடுத்திருப்பது சிறப்பு.

தன் மாமா குடும்பத்தை கொன்றவர்களை சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும், குற்றம் செய்தவர்களை தேடி கண்டுபிடித்து கொல்ல துடிக்கும் ஆக்ரோஷ நாயகன் கதையில் போலீஸ் துரத்தல் காட்சிகளுடன் திரைக்கதையமைத்து கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து சில காட்சிகளை கொடுத்துள்ளார். இயக்குனர் டிஸ்னி முயற்சிக்கு பாராட்டு

மொத்தத்தில் *குற்றம் புரிந்தால்* போலீஸ் தப்பிக்கவிட்டாலும் தவறு        செய்தவன் தண்டனை நிச்சயம்.


Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்